முகப்பு |
கொல்லிப்பாவை |
89. மருதம் |
பா அடி உரல பகுவாய் வள்ளை |
||
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
||
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
||
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
||
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
||
நல் இயல் பாவை அன்ன இம் |
||
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |