வெந்நீர் சேமச் செப்பில் பாதுகாக்கப்பட்டது.

 

277. பாலை

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,

செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது

ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-

'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,

எக் கால் வருவது?' என்றி;

அக் கால் வருவர், எம் காதலோரே.

உரை

தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார்