2.
|
இலங்கு
தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூ வெழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி |
5
|
கோன்முனைக்
கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் |
10
|
கறங்கிசை
வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ |
15
|
ஒல்லா
மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே. |
[தொல்.
புறத். 12, 25, ந. மேற்]
1முதற்பத்தையோ
பத்தாம் பத்தையோ சார்ந்த இவை
தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தனவாகும்.
|