பதிற்றுப் பத்துத் திரட்டு
1 |
|
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
பணிந்து,
வழிமொழிதல் அல்லது, பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே-
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்
கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு,
|
5 |
கால்
கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை
எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
நீர்துனைந்தன்ன செலவின்,
நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே?
|
10 |
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ.
6, இளம்பூரணர்
|
|
மேற்கோள்;
சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்] |
|
|
உரை
|
2 |
|
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு
|
5 |
ஊன்
வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப,
|
10 |
நெடு
மதில், நிரை ஞாயில்,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
ஒல்லா மன்னர் நடுங்க,
|
15 |
நல்ல
மன்ற- இவண் வீங்கிய செலவே!
|
|
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]
|
|
|
உரை
|
3
|
|
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-
களிறு கலிமான்
தேரொடு சுரந்து,
நன்கலன் ஈயும்
நகைசால் இருக்கை,
மாரி என்னாய்
பனி என மடியாய்
பகை வெம்மையின்
அசையா ஊக்கலை
|
5 |
வேறு புலத்து
இறுத்த விறல் வெந் தானையொடு
மாறா மைந்தர்
மாறு நிலை தேய,
மைந்து மலி
ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,
கடாஅ யானை
முழங்கும்,
இடாஅ ஏணி நின்
பாசறையானே.
|
10 |
[புறத்திரட்டு, பாசறை. 8]
|
|
|
உரை
|
4 |
|
பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநளல்லள்,
தன்னொடு புரையுநர்த்
தான் அறிகுநளே.
|
|
[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.] |
|
|
உரை
|
5
|
|
'விசையம் தப்பிய .... ....
என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'
|
|
[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.] |
|
|
உரை
|
|