3.



வந்தனென் பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் றேரொடு சுரந்து
நன்கல னீயு நகைசா லிருக்கை
மாரி யென்னாய் பனியென மடியாய்
5




பகைவெம் மையி னசையா வூக்கலை
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும்
10
இடாஅ வேணிநின் பாசறை யானே.

    (புறத்திரட்டு, பாசறை, 8)