முகப்பு | தொடக்கம் |
இளம் பெரு வழுதியார்
|
15. திருமால்
|
திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு |
|
புல வரை அறியாப் புகழொடு
பொலிந்து,
|
|
நில வரை தாங்கிய நிலைமையின்
பெயராத்
|
|
தொலையா நேமி முதல், தொல் இசை
அமையும்
|
|
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங்
குன்றம்
|
|
5
|
பல எனின், ஆங்கு அவை பலவே:
பலவினும்,
|
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு
உடன்
|
|
நின்று பெற நிகழும் குன்று அவை
சிலவே:
|
|
சிலவினும் சிறந்தன, தெய்வம்
பெட்புறும்
|
|
மலர் அகல் மார்பின் மை படி
குடுமிய
|
|
10
|
குல வரை சிலவே: குல வரை சிலவினும்
|
சிறந்தது கல் அறை கடலும் கானலும்
போலவும்,
|
|
புல்லிய சொல்லும் பொருளும்
போலவும்,
|
|
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு
தொழில் இருவர்த்
|
|
தாங்கும் நீள் நிலை ஓங்கு
இருங்குன்றம்.
|
|
15
|
நாறு இணர்த் துழாயோன் நல்கின்
அல்லதை
|
ஏறுதல் எளிதோ, வீறு பெறு
துறக்கம்?
|
|
அரிதின் பெறு துறக்கம்
மாலிருங்குன்றம்
|
|
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம்,
சிலம்ப. |
|
'திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக' எனல் |
|
அரா அணர் கயந் தலைத் தம்முன்
மார்பின்
|
|
20
|
மரா மலர்த் தாரின் மாண் வரத்
தோன்றி,
|
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு
இழிய,
|
|
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு
திருவின்
|
|
சோலையொடு தொடர் மொழி
மாலிருங்குன்றம்
|
|
தாம் வீழ் காமம் வித்துபு
விளைக்கும்
|
|
25
|
நாமத் தன்மை நன்கனம் படி எழ,
|
யாமத் தன்மை இவ் ஐ
இருங்குன்றத்து,
|
|
மன் புனல் இள வெயில் வளாவ இருள்
வளர்வென,
|
|
பொன் புனை உடுக்கையோன்
புணர்ந்து அமர் நிலையே
|
|
நினைமின், மாந்தீர்! கேண்மின்,
கமழ் சீர்!
|
|
மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம் |
|
30
|
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்
|
சினை யெலாம் செயலை மலர, காய்
கனி
|
|
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
|
|
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.
|
|
சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல் |
|
சென்று தொழுகல்லீர்! கண்டு
பணிமின்மே
|
|
35
|
இருங்குன்று என்னும் பெயர்
பரந்ததுவே
|
பெருங் கலி ஞாலத்துத் தொன்று
இயல் புகழது
|
|
கண்டு, மயர் அறுக்கும் காமக்
கடவுள்.
|
|
குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் |
|
மக முயங்கு மந்தி வரைவரை பாய,
|
|
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு
காட்ட,
|
|
40
|
மணி மருள் நல் நீர்ச் சினை மட
மயில் அகவ,
|
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
|
|
பகர் குழல் பாண்டில் இயம்ப
அகவுநர்
|
|
நா நவில் பாடல் முழவு
எதிர்ந்தன்ன,
|
|
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது
ஒன்னார்க்
|
|
45
|
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று.
|
குன்றத்தானைச் சுற்றம் புடை சூழ்ப் போற்றுமின் |
|
தையலவரொடும், தந்தாரவரொடும்,
|
|
கைம் மகவொடும், காதலவரொடும்,
|
|
தெய்வம் பேணித் திசை
தொழுதனிர் செல்மின்
|
|
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
|
|
50
|
வௌவல் கார் இருள் மயங்கு மணி
மேனியன்,
|
எவ்வயின் உலகத்தும் தோன்றி,
அவ் வயின்
|
|
மன்பது மறுக்கத் துன்பம்
களைவோன்
|
|
அன்பு அது மேஎய்
இருங்குன்றத்தான்.
|
|
பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல் |
|
கள் அணி பசுந் துளவினவை, கருங்
குன்றனையவை;
|
|
55
|
ஒள் ஒளியவை, ஒரு குழையவை;
|
புள் அணி பொலங் கொடியவை;
|
|
வள் அணி வளை நாஞ்சிலவை,
|
|
சலம் புரி தண்டு ஏந்தினவை;
|
|
வலம்புரி வய நேமியவை;
|
|
60
|
வரி சிலை வய அம்பினவை;
|
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர்
வாளவை:
|
|
என ஆங்கு
|
|
நலம் புரீஇ அம் சீர் நாம
வாய்மொழி
|
|
இது என உரைத்த[லி]ன், எம் உள்
அமர்ந்து இசைத்து, இறை,
|
|
65
|
'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என,
|
பெரும் பெயர் இருவரைப் பரவுதும்,
தொழுதே.
|
கடவுள் வாழ்த்து இளம்பெருவழுதியார் பாட்டு |