முகப்பு | தொடக்கம் |
கடுவன் இளவெயினனார் |
3.
திருமால் |
| |
மாஅயோயே! மாஅயோயே! |
|
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி |
|
மணி திகழ் உருபின் மாஅயோயே! |
|
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், |
|
5 |
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், |
திதியின் சிறாரும், விதியின் மக்களும், |
|
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், |
|
தா மா இருவரும், தருமனும், மடங்கலும், |
|
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், |
|
10 |
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் |
மாயா வாய்மொழி உரைதர வலந்து: |
|
'வாய்மொழி ஓடை மலர்ந்த |
|
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், |
|
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை. |
|
| |
15 |
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், |
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; |
|
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் |
|
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் |
|
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் |
|
20 |
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; |
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும், |
|
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் |
|
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு |
|
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும், |
|
25 |
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் |
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும், |
|
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து |
|
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் |
|
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப் |
|
30 |
பாடுவார் பாடும் வகை. |
| |
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் |
|
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; |
|
நகை அச்சாக நல் அமிர்து கலந்த |
|
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை. |
|
35 |
இரு கை மாஅல்! |
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! |
|
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! |
|
எழு கையாள! எண் கை ஏந்தல்! |
|
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! |
|
40 |
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! |
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! |
|
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! |
|
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! |
|
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் |
|
45 |
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! |
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, |
|
முன்னை மரபின் முதுமொழி முதல்வ? |
|
வனப்பும் வலியும் | |
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், |
|
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம் |
|
50 |
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! |
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர், |
|
பிறை வளர், நிறை மதி உண்டி, |
|
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; |
|
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, |
|
55 |
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் |
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; |
|
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும் |
|
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே? |
|
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட |
|
60 |
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! |
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை; |
|
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்: |
|
| |
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம்
நீ; |
|
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; |
|
65 |
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; |
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; |
|
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; |
|
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், |
|
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும் |
|
70 |
மறவியில் சிறப்பின் மாயமார்
அனையை; |
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் |
|
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர்
இலையே: |
|
| |
பறவாப் பூவைப் பூவினோயே! |
|
அருள் குடையாக, அறம் கோலாக, |
|
75 |
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் |
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; |
|
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, |
|
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, |
|
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, |
|
80 |
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: |
| |
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! |
|
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! |
|
| |
இட வல! குட வல! கோவல! காவல! |
|
காணா மரப! நீயா நினைவ! |
|
85 |
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! |
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! |
|
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! |
|
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! |
|
பருதி வலவ! பொரு திறல் மல்ல! |
|
90 |
திருவின் கணவ! பெரு விறல் மள்ள! |
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, |
|
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய |
|
வாய்மொழி மகனொடு மலர்ந்த |
|
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! |
கடவுள் வாழ்த்து கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ |
4. திருமால் |
| |
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம் |
|
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி, |
|
நின் புகழ் விரித்தனர்: கிளக்குங்கால், அவை நினக்கு |
|
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்ஆயினும், |
|
5 |
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப: |
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர், |
|
வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்; |
|
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை; |
|
நோனார் உயிரொடு முரணிய நேமியை: |
|
| |
10 |
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ |
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின் |
|
பிருங்கலாதன் பலபல பிணி பட |
|
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து |
|
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் |
|
15 |
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா |
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி, |
|
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் |
|
படிமதம் சாம்ப ஒதுங்கி, |
|
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப, |
|
20 |
வெடி படா ஒடி தூண் தடியொடு, |
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை; |
|
புருவத்துக் கரு வல் கந்தத்தால் |
|
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் |
|
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்: |
|
| |
25 |
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; |
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள; |
|
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள; |
|
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; |
|
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள; |
|
30 |
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; |
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள; |
|
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள; |
|
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும், |
|
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து, |
|
35 |
மேவல் சான்றன, எல்லாம். |
| |
சேவல் ஓங்கு உயர் கொடியோயே! |
|
சேவல் ஓங்கு உயர் கொடி |
|
நின் ஒன்று உயர் கொடி பனை; |
|
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்; |
|
40 |
நின் ஒன்று உயர் கொடி யானை; |
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று: |
|
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; |
|
அவன் முடிமேல் வலந்தது பாம்பு; |
|
பாம்பு தொடி; பாம்பு முடிமேலன; |
|
45 |
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; |
பாம்பு சிறை தலையன; |
|
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை |
|
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு; |
|
| |
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும், |
|
50 |
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் |
உள்வழி உடையை; இல்வழி இலையே: |
|
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும், |
|
மாற்று ஏமாற்றல் இலையே: 'நினக்கு |
|
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும் |
|
55 |
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: |
| |
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே; |
|
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி, |
|
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை: |
|
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப! |
|
60 |
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை |
அன்ன நாட்டத்து அளப்பரியவை; |
|
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை; |
|
நின்னில் சிறந்த நிறை கடவுளவை; |
|
அன்னோர் அல்லா வேறும் உள: அவை |
|
65 |
நின்ஓர் அன்ஓர் அந்தணர் அரு மறை. |
| |
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை |
|
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும், |
|
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும், |
|
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்! |
|
70 |
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் |
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே; |
|
அவரவர் ஏவலாளனும் நீயே; |
|
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. |
கடவுள் வாழ்த்து கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ் |
5. செவ்வேள் |
| |
பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு, |
|
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, |
|
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து, |
|
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து, |
|
5 |
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய |
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை |
|
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல், |
|
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை, |
|
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து, |
|
10 |
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! |
| |
'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள், |
|
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை! |
|
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்! |
|
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள், |
|
15 |
வேலன் ஏத்தும் வெறியும் உளவே: |
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல, |
|
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்: |
|
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை; |
|
சிறப்பினுள் உயர்வு ஆகலும், |
|
20 |
பிறப்பினுள் இழிபு ஆகலும், |
ஏனோர் நின் வலத்தினதே: |
|
| |
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ, |
|
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து, |
|
நாகம் நாணா, மலை வில்லாக, |
|
25 |
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, |
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப் |
|
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் |
|
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள், |
|
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி |
|
30 |
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, |
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன் |
|
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது |
|
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின், |
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு |
35 |
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள: |
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை |
|
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து, |
|
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர், |
|
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின், |
|
40 |
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி |
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித் |
|
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில், |
|
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள் |
|
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய, |
|
45 |
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: |
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் |
|
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே; |
|
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப் |
|
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்: |
|
50 |
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, |
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன், |
|
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென, |
|
அறு வேறு துணியும் அறுவர் ஆகி, |
|
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்! |
|
| |
55 |
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய |
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய, |
|
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து, |
|
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து |
|
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து, |
|
60 |
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; |
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து, |
|
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்; |
|
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த |
|
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும், |
|
65 |
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், |
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும், |
|
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும், |
|
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு, |
|
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன் |
|
70 |
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். |
| |
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை, |
|
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை |
|
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், |
|
சேரா அறத்துச் சீர் இலோரும், |
|
75 |
அழி தவப் படிவத்து அயரியோரும், |
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார் |
|
நின் நிழல்: |
|
| |
அன்னோர் அல்லது இன்னோர் |
|
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை |
|
80 |
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் |
அருளும், அன்பும், அறனும், மூன்றும் |
|
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! |
கடவுள் வாழ்த்து கடுவன் இளவெயினனார் பாட்டு கண்ணனாகனார் இசை பண்ணுப் பாலையாழ் |