முகப்பு | தொடக்கம் |
நப்பண்ணனார் |
19. செவ்வேள் |
| |
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து, |
|
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து, |
|
'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் |
|
இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின் |
|
5 |
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு |
சாறு கொள் துறக்கத்தவளொடு |
|
மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை. |
|
| |
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல், |
|
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை, |
|
10 |
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார், |
சிறந்தோர் உலகம் படருநர் போல, |
|
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி, |
|
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர், |
|
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின் |
|
15 |
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு |
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய |
|
தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல் |
|
ஆர் வேலை யாத்திரை செல் யாறு. |
|
| |
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் |
|
20 |
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி |
மட மயில் ஓரும் மனையவரோடும், |
|
கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின் |
|
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் |
|
பாடு வலம் திரி பண்பின் பழ மதிச் |
|
25 |
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின், |
பாடிய நாவின், பரந்த உவகையின், |
|
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே, |
|
படு மணி யானை நெடியாய்! நீ மேய |
|
கடி நகர் சூழ் நுவலுங்கால். |
|
| |
30 |
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, |
வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார் |
|
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்; |
|
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக் |
|
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து |
|
35 |
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே, |
குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற |
|
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு! |
|
| |
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும், |
|
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும், |
|
40 |
தெய்வப் பிரமம் செய்குவோரும், |
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும், |
|
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும், |
|
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்; |
|
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப, |
|
45 |
ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்; |
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி |
|
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும், |
|
'இரதி காமன், இவள் இவன்' எனாஅ, |
|
விரகியர் வினவ, வினா இறுப்போரும்; |
|
50 |
'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன் |
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு |
|
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்: |
|
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம், |
|
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும், |
|
55 |
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் |
சோபன நிலையது துணி பரங்குன்றத்து |
|
மாஅல் மருகன் மாட மருங்கு. |
|
| |
பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை, |
|
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான் |
|
60 |
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் |
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க, |
|
'ஏஎ, ஓஒ!' என்று ஏலா அவ் விளி |
|
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச் |
|
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை |
|
65 |
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே |
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை. |
|
| |
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச் |
|
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப, |
|
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய |
|
70 |
அலர் முகிழ் உற, அவை கிடப்ப, |
'தெரி மலர், நனை, உறுவ, |
|
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த |
|
மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு' என |
|
ஆங்கு இள மகளிர் மருள |
|
| |
75 |
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், |
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள், |
|
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை, |
|
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், |
|
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்; |
|
80 |
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க |
மணந்தவை, போல, வரை மலை எல்லாம் |
|
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்; |
|
விடியல் வியல் வானம் போலப் பொலியும் |
|
நெடியாய்! நின் குன்றின்மிசை. |
|
| |
85 |
நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால் |
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா, |
|
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி, |
|
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள், |
|
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர், |
|
90 |
கன்னிமை கனிந்த காலத்தார், நின் |
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் |
|
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார் |
|
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் |
|
குறுகிச் சிறப்பு உணாக்கால். |
|
| |
95 |
குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் |
சிறப்பு உணாக் கேட்டி செவி. |
|
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே |
|
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்; |
|
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும் |
|
100 |
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி; |
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து, |
|
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி, |
|
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில் |
|
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்; |
|
105 |
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே! |
கடவுள் வாழ்த்து நப்பண்ணனார் பாட்டு மருத்துவன் நல்லச்சுதனார் இசை பண் காந்தாரம் |