முகப்பு | தொடக்கம் |
நல்லழிசியார் |
16. வையை |
|
|
கரையே கை வண் தோன்றல் ஈகை
போன்ம் என,
|
|
மை படு சிலம்பின் கறியொடும்,
சாந்தொடும்,
|
|
நெய் குடை தயிரின் நுரையொடும்,
பிறவொடும்,
|
|
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
|
|
5 |
துறையே முத்து நேர்பு புணர் காழ்,
மத்தக நித்திலம்,
|
பொலம் புனை அவிர் இழை, கலங்கல்
அம் புனல் மணி
|
|
வலம் சுழி உந்திய, திணை பிரி
புதல்வர்
|
|
கயந் தலை முச்சிய முஞ்சமொடு
தழீஇ,
|
|
தம்தம் துணையோடு ஒருங்கு உடன்
ஆடும்
|
|
10 |
தத்து அரிக் கண்ணார் தலைதலை
வருமே.
|
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர்
நிறைதலின்,
|
|
படு கண் இமிழ் கொளை பயின்றனர்
ஆடும்,
|
|
களி நாள் அரங்கின் அணி நலம்
புரையும்.
|
|
காவே சுரும்பு இமிர் தாதொடு
தலைத்தலை மிகூஉம்
|
|
15 |
நரந்த நறு மலர் நன்கு
அளிக்கும்மே
|
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர்
விருந்து அயர்வ போல்.
|
|
கான் அல்அம் காவும், கயமும்,
துருத்தியும், தேன்
|
|
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ
நலம்
|
|
பூத்தன்று வையை வரவு.
|
|
|
|
20 |
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும்
எறிந்து,
|
குரும்பை முலைப் பட்ட பூ நீர்
துடையாள்,
|
|
பெருந் தகை மீளி வருவானைக்
கண்டே,
|
|
இருந் துகில் தானையின் ஒற்றி,
'பொருந்தலை;
|
|
பூத்தனள்; நீங்கு' எனப் பொய்
ஆற்றால், தோழியர்
|
|
25 |
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ்
தண் சாந்தின்
|
நாற்றத்தின் போற்றி,
நகையொடும் போத்தந்து,
|
|
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு
எனத் தங்கான்,
|
|
மகிழ, களிப் பட்ட தேன் தேறல்
மாற்றி,
|
|
குருதி துடையாக் குறுகி, மரு(வ),
இனியர்,
|
|
30 |
'பூத்தனள் நங்கை; பொலிக!' என
நாணுதல்
|
வாய்த்தன்றால் வையை வரவு.
|
|
|
|
மலையின்
இழி அருவி மல்கு இணர்ச்
சார்ச் சார்க்
|
|
கரை மரம் சேர்ந்து கவினி;
மடவார்
|
|
நனை சேர் கதுப்பினுள் தண் போது,
மைந்தர்
|
|
35 |
மலர் மார்பின் சோர்ந்த மலர்
இதழ், தாஅய்;
|
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை
நந்திய
|
|
வானம் பெயர்ந்த மருங்கு
ஒத்தல், எஞ்ஞான்றும்,
|
|
தேன் இமிர்
வையைக்கு இயல்பு.
|
|
|
|
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
|
|
40 |
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்
கண் கெண்டை,
|
பல் வரி வண்டினம் வாய் சூழ்
கவினொடும்,
|
|
செல் நீர் வீவயின் தேன் சோர,
பல் நீர்
|
|
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல,
குழைந்து
|
|
வடுப் படு மான்மதச் சாந்து ஆர்
அகலத்தான்,
|
|
45 |
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு
தாக்கத்
|
தொடுத்த தேன் சோரும் வரை
போலும், தோற்றம்
|
|
கொடித் தேரான்
வையைக்கு இயல்பு.
|
|
|
|
வரை ஆர்க்கும் புயல்; கரை
|
|
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
|
|
50 |
கண்ணியர் தாரர், கமழ் நறுங்
கோதையர்,
|
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான்,
ஆடலால்
|
|
நாள் நாள், உறையும், நறுஞ்
சாந்தும், கோதையும்,
|
|
பூத்த புகையும், அவியும் புலராமை
|
|
மறாஅற்க, வானம்; மலிதந்து
நீத்தம்
|
|
55 |
வறாஅற்க, வையை! நினக்கு.
|
காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட,அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது. நல்லழிசியார் பாட்டு நல்லச்சுதனார் இசை பண் நோதிறம் |
|
|
|
தேம் படு மலர், குழை, பூந் துகில்,
|
|
ஏந்து இலை சுமந்து; சாந்தம்
விரைஇ,
|
|
விடை அரை அசைத்த, வேலன்,
கடிமரம்
|
|
பரவினர் உரையொடு பண்ணிய
இசையினர்,
|
|
5 |
விரிமலர் மதுவின் மரம் நனை
குன்றத்து
|
கோல் எரி, கொளை, நறை, புகை,
கொடி, ஒருங்கு எழ
|
|
மாலை மாலை, அடி
உறை, இயைநர்,
|
|
மேலோர்
உறையுளும் வேண்டுநர் யாஅர்?
|
|
|
|
ஒருதிறம்,
பாணர் யாழின் தீங்
குரல் எழ,
|
|
10 |
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர்
இசை எழ,
|
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு
எழ,
|
|
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து
இசை ஊத,
|
|
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை
எழ,
|
|
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி
நீர் ததும்ப,
|
|
15 |
ஒருதிறம், பாடல் நல் விறலியர்
ஒல்குபு நுடங்க,
|
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங்
கொடி நுடங்க,
|
|
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம்
குரலின்
|
|
நீடுகிளர் கிழமை நிறை குறை
தோன்ற,
|
|
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி
குரல் தோன்ற,
|
|
20 |
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர்
கோடல்
|
மாறு அட்டான் குன்றம் உடைத்து.
|
|
|
|
பாடல்
சான்று பல் புகழ் முற்றிய
|
|
கூடலொடு பரங்குன்றின் இடை,
|
|
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர்
திளைப்ப,
|
|
25 |
நணிநணித்து ஆயினும், சேஎய்ச்
சேய்த்து;
|
மகிழ் மிகு தேஎம் கோதையர்
கூந்தல் குஞ்சியின்
|
|
சோர்ந்து அவிழ் இதழின்
இயங்கும் ஆறு இன்று.
|
|
வசை நீங்கிய வாய்மையால்,
வேள்வியால்,
|
|
திசை நாறிய குன்று அமர்ந்து,
ஆண்டுஆண்டு
|
|
30 |
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
|
வாய்வாய் மீ போய், உம்பர்
இமைபு இறப்ப;
|
|
தேயா மண்டிலம்
காணுமாறு இன்று.
|
|
|
|
வளை முன் கை வணங்கு இறையார்,
|
|
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
|
|
35 |
தார் மார்பின் தகை இயலார்,
|
ஈர மாலை இயல் அணியார்,
|
|
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு
உடன் ஆட,
|
|
சுனை மலர்த்
தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா:
|
|
அனைய,
பரங்குன்றின் அணி.
|
|
|
|
40 |
கீழோர் வயல் பரக்கும், வார்
வெள் அருவி பரந்து ஆனாது
|
அரோ;மேலோர் இயங்குதலால்,
வீழ் மணி நீலம் செறு
|
|
உழக்கும் அரோ;தெய்வ விழவும்,
திருந்து விருந்து அயர்வும்,
|
|
அவ் வெள் அருவி அணி பரங்
குன்றிற்கும்,
|
|
தொய்யா விழுச் சீர் வளம் கெழு
வையைக்கும்,
|
|
45 |
கொய் உளை மான் தேர்க் கொடித்
தேரான் கூடற்கும்,
|
கை ஊழ்
தடுமாற்றம் நன்று.
|
|
|
|
என ஆங்கு,
|
|
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட்
கொடி,
|
|
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர்,
இறைவ!
|
|
50 |
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,
|
அணி நெடுங் குன்றம் பாடுதும்;
தொழுதும்;
|
|
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
|
|
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.
|
கடவுள் வாழ்த்து குன்றம்பூதனார் பாட்டு நல்லச்சுதனார் இசை பண் காந்தாரம் |