13. திருமால் |
| |
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று |
|
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி, |
|
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின் |
|
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி, |
|
5 |
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் |
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்! |
|
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த |
|
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல, |
|
நேமியும் வளையும் ஏந்திய கையான் |
|
10 |
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், |
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின் |
|
திரு வரை அகலம் தொழுவோர்க்கு |
|
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து. |
|
| |
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, |
|
15 |
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! |
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; |
|
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும், |
|
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே; |
|
இரண்டின் உணரும் வளியும் நீயே; |
|
20 |
மூன்றின் உணரும் தீயும் நீயே; |
நான்கின் உணரும் நீரும் நீயே; |
|
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே: |
|
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும், |
|
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த |
|
25 |
காலமும், விசும்பும், காற்றொடு கனலும். |
| |
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண், |
|
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த |
|
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத் |
|
துளவம் சூடிய அறிதுயிலோனும் |
|
30 |
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால், |
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் |
|
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின், |
|
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் |
|
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய |
|
35 |
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி |
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி, |
|
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை! |
|
| |
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் |
|
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை; |
|
40 |
ஏவல் இன் முது மொழி கூறும், |
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை; |
|
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி, |
|
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை; |
|
வலம்புரி, வாய்மொழி, அதிர்பு வான், முழக்குச் செல், |
|
45 |
அவை நான்கும் உறழும் அருள், செறல், வயின் மொழி: |
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும் அவை மூன்றும் |
|
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை; |
|
இருமை வினையும் இல, ஏத்துமவை: |
|
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை; |
|
50 |
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை |
அடியும், கையும், கண்ணும், வாயும்: |
|
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும், |
|
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை; |
|
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை; |
|
55 |
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; |
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை; |
|
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண், |
|
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர் |
|
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப் |
|
60 |
புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்! |
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்; |
|
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் |
|
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்: |
|
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! |
கடவுள் வாழ்த்து நல்லெழுநியார் பாட்டு ............... பண் நோதிறம் |