உரைச்சிறப்புப்பாயிரம்
நிலைமண்டில
ஆசிரியப்பா
1 |
கண்ணுதற்
கடவு ளண்ணலங் குறுமுனி
முனைவேன் முருக னெனவிவர் முதலிய
திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த
சங்க மென்னுந் துங்கமலி கடலுள் |
5 |
அரிதி
னெழுந்த பரிபாட் டமுதம்
அரசுநிலை திரீஅய வளப்பருங் காலம்
கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்
பாடிய சான்றவர் பீடுநன் குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற் |
10 |
றந்திடை
மடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற் |
15 |
சிற்றறி
வினர்க்குந் தெற்றெனத் தோன்ற
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பிற் றொல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன் |
20 |
நீணிலங்
கடந்தோன் றாடொழு மரபிற்
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே. |
நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின்
வரும்பரிசு புள்ளூரு மாலே - சுரும்பு
வரிபாட லின்சீர் வளர்துளவத் தோளாய்
பரிபாட லின்சீர்ப் பயன்.
1. செந்தமிழ்
முதற்றொகுதி, பக்கம், 88 - 90.
|