| |  | முறைப்பட வினையை முடித்துக் காட்டிப் பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப்
 |  | 30. | பாற்பட நூலின் யாப்புற வுரைத்த நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப்
 போற்ற வின்னுரை பொருள்பெற  1விளம்பியும்,
 வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
 பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
 |  | 35 | சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம் வந்தா தரிப்ப  2வண்பெரு வஞ்சிப்
 பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
 திருத்தரு முனிவன் கருத்திது வென்னப்
 பருப்பொருள் கடிந்து  3பொருட்டொடர்ப் படுத்து
 |  | 40. | வினையொடு முடியப் புனையுரை யுரைத்தும், நல்லறி வுடைய தொல்பே ராசான்
 கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
 பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
 கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
 |  | 45 | விதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும், தண்டமிழ்  4தெரித்த வண்புகழ் மறையோன்
 வண்டிமிர் சோலை மதுரா புரிதனி
 லெண்டிசை விளங்க வந்த வாசான்
 பயின்ற கேள்விப் பாரத்து வாச
 |  | 50 | னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய தூய ஞான நிறைந்த சிவச்சுடர்
 தானே யாகிய தன்மை யாள
 னவின்ற வாய்மை நச்சினார்க் கினிய
 5னிருவினை கடியு மருவியம் பொதியின்
 |  | 55 | மருவிய குறுமுனி தெரிதமிழ் விளங்க வூழி யூழி காலம்.
 வாழி வாழியிம் மண்மிசை யானே.
 | 
 
 (பிரதிபேதம்) 1அமைத்தும், 2வரைபெரு வஞ்சிப், 3 பொருட்டொடர் படுத்து, 4தெரிந்தவண் புகழ், 5அருவினைகடியும்.
 |