அடி புனை தொடுகழல்

83
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக என்றும்
5
ஒரு பாற் படாஅதாகி,
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!

திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.