முகப்பு | தொடக்கம் |
அடுநை ஆயினும் |
36 |
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், |
|
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், |
|
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் |
|
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் |
|
5 |
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, |
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் |
|
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, |
|
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் |
|
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் |
|
10 |
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, |
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் |
|
சிலைத் தார் முரசம் கறங்க, |
|
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|