முகப்பு | தொடக்கம் |
அணங்குடை நெடுங் கோட்டு |
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|