அணித் தழை நுடங்க ஓடி

340
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
5
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.

திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.