முகப்பு | தொடக்கம் |
அத்தம் நண்ணிய நாடு |
313 |
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் |
|
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் |
|
காணிய சென்ற இரவல் மாக்கள் |
|
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; |
|
5 |
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட |
கழி முரி குன்றத்து அற்றே, |
|
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
|
திணை அது; துறை வல்லாண் முல்லை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|