முகப்பு | தொடக்கம் |
அந்தோ எந்தை |
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|