முகப்பு | தொடக்கம் |
அருளாய் ஆகலோ கொடிதே |
144 |
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் |
|
கார் எதிர் கானம் பாடினேமாக, |
|
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் |
|
5 |
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, |
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! |
|
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, |
|
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் |
|
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, |
|
10 |
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: |
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், |
|
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் |
|
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, |
|
முல்லை வேலி, நல் ஊரானே.' |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
|