அலங்கு கதிர் சுமந்த

375
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி,
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக,
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல்
5
நாரும் போழும் கிணையொடு சுருக்கி,
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,
10
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந!
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால்
15
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
20
பீடு இன்று பெருகிய திருவின்,
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் பாடியது.