முகப்பு | தொடக்கம் |
அலங்கு கதிர் சுமந்த |
375 |
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, |
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் |
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, |
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் |
|
5 |
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, |
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் |
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் |
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், |
|
10 |
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! |
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! |
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, |
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் |
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் |
|
15 |
புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே |
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, |
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, |
|
பெரிய ஓதினும் சிறிய உணராப் |
|
20 |
பீடு இன்று பெருகிய திருவின், |
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் பாடியது.
|