முகப்பு | தொடக்கம் |
அன்ன ஆக: நின் அருங் |
146 |
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை |
|
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல |
|
நல் நாடு பாட, என்னை நயந்து |
|
5 |
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ |
நல்காமையின் நைவரச் சாஅய், |
|
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை |
|
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
|
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, |
|
10 |
தண் கமழ் கோதை புனைய, |
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
|