ஆசு ஆகு எந்தை

307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன,
5
கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் வான் குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர்
10
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு,
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.

திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
........................................................................