முகப்பு | தொடக்கம் |
ஆடு இயல் அழல் குட்டத்து |
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|