முகப்பு | தொடக்கம் |
ஆர்கலியினனே, சோணாட்டு அண்ணல் |
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|