ஆர்ப்பு எழு கடலினும்

81
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.