முகப்பு | தொடக்கம் |
ஆவும், ஆன் இயற் பார்ப்பன |
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|