முகப்பு | தொடக்கம் |
இரவலர் புரவலை |
162 |
இரவலர் புரவலை நீயும் அல்லை; |
|
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; |
|
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு |
|
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் |
|
5 |
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
நெடு நல் யானை எம் பரிசில்; |
|
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
|