முகப்பு | தொடக்கம் |
இரு முந்நீர்க் குட்டமும் |
20 |
இரு முந்நீர்க் குட்டமும், |
|
வியல் ஞாலத்து அகலமும், |
|
வளி வழங்கு திசையும், |
|
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு |
|
5 |
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, |
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: |
|
சோறு படுக்கும் தீயோடு |
|
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது |
|
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; |
|
10 |
திருவில் அல்லது கொலை வில் அறியார்; |
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; |
|
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் |
|
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு |
|
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, |
|
15 |
பகைவர் உண்ணா அரு மண்ணினையே; |
அம்பு துஞ்சும் கடி அரணால், |
|
அறம் துஞ்சும் செங்கோலையே; |
|
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், |
|
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; |
|
20 |
அனையை ஆகல்மாறே, |
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|