முகப்பு | தொடக்கம் |
இவ்வே, பீலி அணிந்து |
95 |
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, |
|
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, |
|
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, |
|
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, |
|
5 |
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் |
உண்டாயின் பதம் கொடுத்து, |
|
இல்லாயின் உடன் உண்ணும், |
|
இல்லோர் ஒக்கல் தலைவன், |
|
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. |
|
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
| |
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
|