முகப்பு | தொடக்கம் |
இவர் யார்? என்குவைஆயின், |
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|