முகப்பு | தொடக்கம் |
இவற்கு ஈத்து உண்மதி |
290 |
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர் |
|
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! |
|
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, |
|
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் |
|
5 |
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; |
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், |
|
உறைப்புழி ஓலை போல, |
|
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே. |
|
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
| |
ஒளவையார் பாடியது.
|