முகப்பு | தொடக்கம் |
இவன் யார்? |
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|