முகப்பு | தொடக்கம் |
இழை அணிப் பொலிந்த |
89 |
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், |
|
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! |
|
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, |
|
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! |
|
5 |
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன |
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, |
|
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை |
|
வளி பொரு தெண் கண் கேட்பின், |
|
'அது போர்' என்னும் என்னையும் உளனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|