முகப்பு | தொடக்கம் |
இன் கடுங் கள்ளின் |
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|