முகப்பு | தொடக்கம் |
ஈ என இரத்தல் |
204 |
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், |
|
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; |
|
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், |
|
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; |
|
5 |
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் |
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; |
|
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, |
|
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், |
|
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; |
|
10 |
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, |
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் |
|
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் |
|
கருவி வானம் போல |
|
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
|