முகப்பு | தொடக்கம் |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே |
312 |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; |
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; |
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; |
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, |
|
5 |
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
| |
பொன்முடியார் பாடியது.
|