முகப்பு | தொடக்கம் |
உடையன்ஆயின் உண்ணவும் |
315 |
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; |
|
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; |
|
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி |
|
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, |
|
5 |
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் |
கான்று படு கனை எரி போல, |
|
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|