முகப்பு | தொடக்கம் |
உடும்பு உரித்தன்ன |
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|