முகப்பு | தொடக்கம் |
உண்போன் தான் நறுங் கள்ளின் |
347 |
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில |
|
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த |
|
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, |
|
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், |
|
5 |
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, |
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன |
|
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, |
|
........................................................................................................... |
|
என் ஆவதுகொல் தானே?..................................... |
|
10 |
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் |
வினை நவில் யானை பிணிப்ப, |
|
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|