முகப்பு | தொடக்கம் |
உரு கெழு ஞாயிற்று |
160 |
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த |
|
முளி புல் கானம் குழைப்ப, கல்லென |
|
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, |
|
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
|
5 |
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய |
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, |
|
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், |
|
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற |
|
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, |
|
10 |
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, |
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, |
|
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், |
|
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; |
|
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, |
|
15 |
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, |
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, |
|
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் |
|
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், |
|
20 |
கூழும் சோறும் கடைஇ, ஊழின் |
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, |
|
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், |
|
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, |
|
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் |
|
25 |
வினவல் ஆனாளாகி, நனவின் |
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, |
|
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே |
|
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை |
|
நீர் சூழ் நிலவரை உயர, நின் |
|
30 |
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|