முகப்பு | தொடக்கம் |
உழுது ஊர் காளை ஊழ் |
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|