முகப்பு | தொடக்கம் |
உற்றுழி உதவியும் |
183 |
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், |
|
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; |
|
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், |
|
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; |
|
5 |
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், |
'மூத்தோன் வருக' என்னாது, அவருள் |
|
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; |
|
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், |
|
கீழ்ப்பால் ஒருவன் கற்பின், |
|
10 |
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.
|