முகப்பு | தொடக்கம் |
ஊர் நனி இறந்த |
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|