எஃகு உளம் கழிய

282
எஃகு உளம் கழிய, இரு நிலம் மருங்கின்,
அருங் கடன் இறுத்த பெருஞ் செயாளனை,
'யாண்டு உளனோ?' என, வினவுதி ஆயின்,
.............................................................................................
5
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அருங் கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே;
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்
.......................................................................................
10
அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது, களத்து ஒழியாதே;
சேண் விளங்கு நல் இசை நிறீஇ,
நா நவில் புலவர் வாய் உளானே.

திணை ...................
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.