முகப்பு | தொடக்கம் |
எந்தை வாழி ஆதனுங்க |
175 |
எந்தை! வாழி; ஆதனுங்க! என் |
|
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; |
|
நின் யான் மறப்பின், மறக்கும் காலை, |
|
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், |
|
5 |
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல் |
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் |
|
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த |
|
உலக இடைகழி அறை வாய் நிலைஇய |
|
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் |
|
10 |
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|