முகப்பு | தொடக்கம் |
எருமை அன்ன கருங் கல் |
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|