முகப்பு | தொடக்கம் |
எழு இனி நெஞ்சம் |
207 |
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, |
|
பருகு அன்ன வேட்கை இல்வழி, |
|
அருகில் கண்டும் அறியார் போல, |
|
அகம் நக வாரா முகன் அழி பரிசில் |
|
5 |
தாள் இலாளர் வேளார் அல்லர்? |
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே |
|
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; |
|
மீளி முன்பின் ஆளி போல, |
|
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென |
|
10 |
நோவாதோன்வயின் திரங்கி, |
வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|