முகப்பு | தொடக்கம் |
என்னைக்கு ஊர் இஃது |
85 |
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், |
|
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், |
|
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; |
|
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; |
|
5 |
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; |
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், |
|
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, |
|
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|