என்னை புற்கை உண்டும்

84
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே;
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே,
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண்,
5
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.