முகப்பு | தொடக்கம் |
என்னை மார்பில் புண்ணும் |
280 |
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; |
|
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; |
|
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; |
|
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; |
|
5 |
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் |
|
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; |
|
துடிய! பாண! பாடு வல் விறலி! |
|
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் |
|
10 |
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் |
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, |
|
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் |
|
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் |
|
கழி கல மகளிர் போல, |
|
15 |
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
| |
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|